மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 52,574 புள்ளிகளானது. என்.டி.பி.சி. பங்கு 3.8%-மும் டைட்டன் பங்கு 1.8%-மும் எஸ்.பி.ஐ. பங்கு .6%-மும் விலை அதிகரித்து வர்த்தகம் நடைபெறுகிறது. இண்டஸ் இண்ட் வங்கி, டாடா ஸ்டீல் , எச்.டி.எஃ ப்.சி., பஜாஜ் ஃபின்செர்வ் பங்குகள் 1%-க்கு மேல் விலை அதிகரித்தன. மாருதி சுசூகி, டி.சி.எஸ்., டெக் மகிந்திரா உள்ளிட்ட சில பங்குகள் மட்டும் விலை குறைந்து கைமாறின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 63 புள்ளிகள் அதிகரித்து 15,746 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

Related Stories: