விளையாட்டு 32-வது ஒலிம்பிக் போட்டி: உகாண்டா அணி வீரர்கள் 9 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி Jun 21, 2021 32வது ஒலிம்பிக் டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடக்கிறது. ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த உகாண்டா அணியில் 9 பேர் ஜப்பான் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இந்த போட்டியில் பங்கேற்க இப்போதே ஒவ்வொரு அணிகளாக ஜப்பான் செல்ல தொடங்கி விட்டன. ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த உகாண்டா அணியில் 9 பேர் ஜப்பான் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். ஜப்பான் கிளம்புவதற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் நெகட்டிவ் முடிவே வந்துள்ளது. தொற்றுக்குள்ளான நபரை தவிர மற்றவர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை