தமிழகம் ஆரணி அருகே, பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை: தாய் உள்பட 3 பெண்கள் கைது Jun 21, 2021 ஆண்டிப்பட்டி ஆரணி: ஆரணி அருகே, பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை செய்த தாய் உள்பட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெற்றோருடன் வசித்து வந்த 7 வயது சிறுவனுக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுவனுக்கு பேய் பிடித்ததாக அவரது உறவினர்கள் கருதி சிறுவனின் உடலில் இருந்த பேயை விரட்டுவதாக கூறி மூன்று பெண்கள் அந்த சிறுவனை மாறி மாறி அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் கதறி அழுத போதும் மூன்று பெண்கள் தொடர்ச்சியாக அடித்ததன் காரணமாக மயங்கி விழுந்துள்ளான். பின்னர் உறவினர்கள் சென்று எழுந்திருக்க செய்தப்போது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் சிறுவனுக்கு மருத்துவ முறையில் உடல்நிலை சரி இல்லாததை பேய் பிடித்ததாக கூறி இரவு முழுவதும் அடித்தே கொலை செய்தனர் என 3 பெண்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் சிறுவனின் தாய் உள்பட 3 பெண்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, வலிப்பு வந்து சிறுவன் இறந்துவிட்டதாக கைதான மூன்று பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000 அதிகரிக்கும்… சுங்க கட்டணம் உயர்வால் லாரிகளுக்கு கூடுதல் செலவு: திரும்பப்பெற உரிமையாளர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் புதுப்பிக்க ஆணை!
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட 53 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்
ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில் சிக்கிய நடிகையான எம்பி நவ்நீத் நள்ளிரவில் பாஜகவில் ஐக்கியம்: அமராவதி வேட்பாளராக உடனடி அறிவிப்பு
புதுச்சேரியில் ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது கால் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!!
சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை
புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை கையகப்படுத்திய விவகாரம்; இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர்களுக்கு கண்டனம்: நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதம் முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு
மேட்டூரில் பெண் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கணவர் தகவல்