மேல்மலையனூர் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் வளத்தி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் மேல்மலையனூர் தாலுகாவில் அமைந்துள்ள ஞானோதயம் மாவட்ட எல்லை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரில் இருந்து வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 41 மூட்டையில் கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.