சென்னை: சென்னையில் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய இளைஞர் கூட்டம் காவல்துறையிடம் சிக்கியுள்ளது. வேளச்சேரி எம்ஜிஆர் நகர் விஷ்வா என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் வீட்டு மாடியில் கொண்டாடியுள்ளார். அப்போது அவர் கேக்கை அவர் பட்டாக்கத்தியால் வெட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுதொடர்பாக விசாரித்த காவல்துறையினர் விஷ்வா மற்றும் அவர்களது நண்பர்கள் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துருப்பிடித்த நிலையில் பட்டாக்கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.