உலகம் பிரேசிலில் 5 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு!: தொற்றை தடுக்க தவறிய அதிபர் போல்சனாரோ பதவி விலக கோரி மக்கள் தொடர் போராட்டம்..!! Jun 21, 2021 கொரோனா பிரேசில் ரியோ டி ஜெனிரோ: பிரேசில் அதிபர் போல்சனாரோவை பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றுகளும் உயிரிழப்புகளும் அதிகரித்திருக்கின்றன. சமீபத்தில் பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துவிட்டது. இதனால் கோவமடைந்திருக்கும் அந்நாட்டு மக்கள் தொற்றினை தடுக்க தவறிவிட்ட அந்நாட்டு அதிபர் போல்சனாரோவை பதவி விலக வலியுறுத்தி கடந்த 18ம் தேதி முதல் பிரேசில் முழுவதுமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோருக்காக ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபா கேபனா கடற்கரையில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். கடற்கரை மணலில் ரோஜா மலர்களை நட்டு உயிரிழந்த 5 லட்சம் பேருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர். பிரேசிலில் தற்போது நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்படுகின்றன. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்தை கடந்திருக்கிறது. தொற்று அதிகம் உள்ள நாடுகளின் அட்டவணையில் அமெரிக்கா, இந்தியாவிற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் பிரேசில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்