முக்கிய செய்தி வர்த்தகம் ஏறுமுகத்தில் தங்கம் விலை!: சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.35,480-க்கு விற்பனை..கலக்கத்தில் இல்லத்தரசிகள்..!! Jun 21, 2021 சவரன் சென்னை: கடந்த 4 நாட்களாக சரிவை சந்திருந்த தங்கம் விலை இன்று உயர்வை கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,435-க்கும், சவரன் ரூ.35,480க்கும் விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.4,430க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.35,440க்கும் விற்கப்பட்டது. மாலையில் என்ற மாற்றமும் இல்லை. இந்நிலையில், தொடர் சரிவில் இருந்த தங்கம் விலை இன்று சற்று உயர்வை கண்டிருக்கிறது. இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. வரும் நாட்களில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலை அதிகரித்து இருப்பது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. நகை வாங்க சிறுக, சிறுக சேர்த்து வைத்தவர்களுக்கு இந்த விலை ஏற்றம் ஏமாற்றத்தை பெற்று தந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்திருப்பது நகை பிரியர்களை வேதனையடைய செய்துள்ளது.
பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது!
நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி பொதுமக்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு !
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் பக்தர்களின் ஆரவாரத்துடன் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு பேச்சு; மோடிக்கு எதிராக குவியும் கண்டனங்கள்.! மக்களை திசைதிருப்ப தரம் தாழ்ந்து பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு