பேய் பிடித்ததாக கூறி சிறுவனை 3 பெண்கள் கொன்றதாக புகார்

திருவண்ணாமலை: ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை 3 பெண்கள் கொன்றதாக புகார் எழுந்துள்ளது. கே.வி.குப்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பேய் ஓட்டுவதற்காக சிறுவன் சபரியை ஆட்டோவில் அழைத்து சென்றனர். இரவானதால் வழியில் இருந்த கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் சிறுவனுடன் 3 பெண்களும் தங்கியுள்ளனர். திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நெஞ்சில் கை வைத்து 3 பேரும் அமுக்கியதில் சிறுவன் சபரி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மகன் சபரியை கொன்ற மனநலம் குன்றிய தாய் திலகவதி, சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories: