புதுடெல்லி: ஒரு மாதத்திற்கு மேல் வேலையின்றி இருக்கும் ஊழியர்கள், பிஎப் கணக்கின் மொத்த தொகையில் இருந்து 75 சதவீதம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2வது ்அலை தாக்குதல் காரணமாக, தற்போது பணியில் இருக்கும் ஊழியர்கள் பிஎப்.பில் இருந்து 75 சதவீத பணத்தை எடுக்கும் சிறப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா சூழ்நிலையால் பல லட்சம் ஊழியர்கள் வேலைஇழந்து தவித்து வருகின்றனர். இதன் காரணமாக வருமானம் இன்றி, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இவர்களை கருத்தில் கொண்டு, வேலை இழந்து தவிக்கும் ஊழியர்களும் தங்களின் பிஎப் தொகையில் இருந்து 75 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.