சென்னை: தமாகா மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் கட்சியில் இருந்து திடீர் விலகினார். சென்னையில் ஜி.கே.வாசனுடன் நெருக்கமாக இருந்த தென்சென்னை கிழக்கு மாவட்ட தவைர் கொட்டிவாக்கம் முருகன் தமாகாவில் இருந்த விலகி ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு அனுப்பி வைத்தார். அதை ஜி.கே.வாசன் ஏற்றுக் கொண்டார். தற்காலிக மாவட்ட பொறுப்பாளராக இ.எஸ்.எஸ். ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னுடைய ராஜினாமா குறித்து கொட்டிவாக்கம் முருகன் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் விலகி தமாகாவை தொடங்கினார். அக்கட்சி தொடங்கியதன் நோக்கம், குறிக்கோள் என எதையும் அவர் நிறைவேற்றவில்லை.