தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் மாலினிக்கு கடந்த 19ம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று காலை கழிவறைக்கு சென்ற மாலினி திரும்பியபோது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாலினி, கண்ணீர் விட்டு கதறியழுதார். மருத்துவமனை சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, அதில் பிரசவ வார்டில் இருந்து ஒரு பெண், குழந்தையை தூக்கி சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.