புதுடெல்லி: ‘கொரோனா தொற்றால் உயிரிழந்த அனைவருக்கும் தேசிய பேரிடர் நிதியில் இருந்து 4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது,’ என உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சால், ரீபக் கன்சால் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநலமனுவில், ‘நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இறந்த சுமார் 3.86 லட்சம் பேருக்கும் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12வது பிரிவின்படி தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏனெனில், கொரோனா பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு உள்ளது., கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் நபர்களுக்கு, அவர்கள் கொரோனாவால் தான் இறந்தார்கள் என்று மருத்துவர்கள் சான்று அளிப்பதில்லை. அதனால், கொரோனா பாதிப்பால் மருத்துவனையில் இறப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கூறியுள்ளனர். இதை கடந்த 11ம் தேதி விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் அமர்வு, இதற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.