கொரோனா நிவாரண நிதிக்கு இயக்குனர் சுசீந்திரன் 5 லட்சம்

சென்னை: கொரோனா பேரிடர் தடுப்பு பணிகளுக்காக அனைத்து துறையினரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் அவரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமும் நிதி அளித்து வருகின்றனர்.  இந்நிலையில் இயக்குனரும், தயாரிப்பாளருமான சுசீந்திரன், ஆன்லைனில் நடிப்பு மற்றும் இயக்கம் குறித்து பயிற்சி அளித்ததன் மூலம் கிடைக்கும் முழு தொகையையும் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி வசூலான 5 லட்சத்தை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

Related Stories: