நீட் தேர்வை தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பு ஊசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 11,490 பேர் பயன்பெறும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு உள்ளது. தமிழக அரசு சார்பில் சட்டப் போராட்டம் என்பது தொடரும். திமுக அரசு என்றும் நீட் தேர்வுக்கு எதிரானது. நீட் தேர்வினை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்வுக்கு்குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். மேலும் நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு பத்து நாட்களில் அறிக்கையின் முடிவு வர உள்ளது. பின்னர் அது குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும்.  மேலும் அடுத்த மாதத்திற்கான தடுப்பூசி எண்ணிக்கையை மத்திய அரசு 71 லட்சமாக உயர்த்தி தருவதாகவும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை கொடுத்தாலும் அதனை செலுத்த் தமிழக சுகாதாரத்துறை தயாராக உள்ளது என்றார்.

Related Stories: