சென்னை: தமிழகத்தில் 40 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளது. இந்த மண்டலங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பொருளாதார மண்டலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்குள் ஏற்படுத்துவதற்கான திட்டத்தை முன்னெடுக்கும் நடவடிக்கையில் எல்காட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான பணிகளை மேற்கொள்ள எல்காட் நிறுவனம் சார்பில் கட்டுமான பணிக்கு தகுதி வாய்ந்த பொறியாளர்களை அயல்பணி அடிப்படையில் அனுப்பி வைக்குமாறு நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்திக்கு கடிதம் எழுதியுள்ளது.