சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றன்ர். சென்னை விமான நிலைய மேலாளர் அறைக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னை விமான நிலையப் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அந்த குண்டு மதியத்துக்குள் வெடித்து சிதறும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து விமானநிலைய உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு விமானநிலைய மேலாளர் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சென்னை விமானநிலையத்தில் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான முனையப் பகுதி, கார் பார்க்கிங் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர்.