குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் நேற்று சாலையோரம் மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக மொபட்டில் குடிபோதையில் வந்த வாலிபர் மூதாட்டி மீது மோதுவது போல் சென்றுள்ளார். மேலும் அவர் ஓட்டி வந்த மொபட் சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மொபட்டில் வந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் தப்பி தனது வீட்டிற்குள் சென்றுவிட்டார். இதுகுறித்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போதையில் ஆட்டம் போட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர்.