சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறு, குறு தொழில்கள் செய்பவர்கள் மற்றும் குடிசை தொழில், கைத்தறி தொழில்கள் செய்து வாழ்க்கை நடத்தி வந்த லட்சக்கணக்கானோர் கடந்த 15 மாதங்களாக கொரோனாவால் சிக்கி, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில் நடத்த முடியாமலும், வங்கி உள்ளிட்ட பல இடங்களில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமலும் வியாபாரிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.