ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், காந்தி தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (30). இவர், சலூன் கடை நடத்தினார். நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள புழல் ஏரியில் குளித்துள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற சத்யராஜ், நீச்சல் தெரியாததால் தத்தளித்துள்ளார். நண்பர்களால் அவரை காப்பாற்ற முடியாததால் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். அவர்களாலும் சத்யராஜை மீட்க முடியவில்லை. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அம்பத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்துவந்து ஏரியில் இறங்கி தேடினர்.