திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை பிரிந்த தனியார் கம்பெனி ஊழியர் நேற்று மனஉளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருக்கழுக்குன்றம் அருகே ஈச்சங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் உதயன் (34). தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சத்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் சத்யா கணவரை பிரிந்து, கடந்த 4 ஆண்டுகளாக தாய்வீட்டில் வசித்து வருகிறார். இதில் உதயன் மனமுடைந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.