களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே வீட்டில் மூட்டை மூட்டையாக பதுக்கிய 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமனை பகுதியை சேர்ந்தவர் முகமது அஜேஸ். கடந்த ஜனவரி மாதம் அருமனை அருகே அண்டுகோடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளார். தொடர்ந்து மனைவியுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். அக்கம் பக்கத்தினரிடம் வாகன உதிரிபாகங்கள் வியாபாரம் செய்து வருவதாக கூறி வந்து உள்ளார். பின்னர் ஒரு மாதத்தில் மனைவி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதனால் தனியாக வீட்டில் வைத்து வியாபாரம் செய்து வந்து உள்ளார்.