முக்கிய செய்தி இந்தியா அடுத்த ஆண்டில் 32 ரபேல் ரக போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும்: தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா தகவல் Jun 20, 2021 தளபதி ஆர் க்யூ எஸ் பதாரியா டெல்லி: அடுத்த ஆண்டில் 32 ரபேல் ரக போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும் என்று விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா தெரிவித்தார். ஐதராபாத் அருகே தண்டிக்கல் என்ற இடத்தில் விமானப்படை அகாடமியில், ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நேற்று நடந்தது. இந்த அணிவகுப்பை விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா பார்வையிட்டார். 36 ரபேல் போர் விமானங்களும் அடுத்த ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்த்துக்கொள்ளப்படும். இதுதான் முழுமையான இலக்கு ஆகும். இதை நான் ஏற்கனவே குறிப்பிட்டும் உள்ளேன். ஒன்றல்லது இரண்டு விமானங்கள் கொரோனா தொற்று பிரச்சினையால் வருவது சற்றே தாமதிக்கலாம். ஆனால் விமானங்களை அவர்கள் சப்ளை செய்வது உரிய நேரத்தில் நடந்து முடியும். எனவே ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் நாங்கள் திட்டமிட்டபடி சேர்த்துக்கொள்வோம் என கூறினார். கிழக்கு லடாக்கில் இந்திய சீன எல்லையில் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று கேட்கிறீர்கள். இந்தப் பிரச்சினையில் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் முதல் முயற்சி என்பது பேச்சு வார்த்தையைத் தொடர்வதும், எஞ்சியுள்ள மோதல் பகுதிகளில் படைகளை விலக்கிக்கொள்வதும்தான். அதன்பின்னர் பதற்றம் தணிந்து விடும் என தெரிவித்தார். இந்திய விமானப்படையில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிநவீன தொழில்நுட்பங்கள் படையில் சேர்க்கப்படுகின்றன. இந்த பின்னணியில் இந்திய விமானப்படையின் தற்போதைய திறன்மேம்பாடு மிகப்பெரியது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: ராகுல், சசிதரூர், டி.கே.சுரேஷ் தொகுதிகளுக்கும் நடக்கிறது
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!!
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!
தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி!!
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் : அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜர்!!