சென்னை: தமிழகத்திற்கு மேலும் 3,10,150 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேயில் இருந்து நேற்று சென்னை வந்தது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்கின்றனர். இதனால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. எனவே தமிழ்நாடு அரசே மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி, நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்கிறது. அந்த விதத்தில் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவழைக்கப்படுகின்றன.