விழுப்புரம்: விழுப்புரத்தை சேர்ந்தவர் முகமது சாகுல்(25). இன்ஜினியரான இவர், மனித உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையை உடனே எச்சரிக்கும் புதிய கருவியான ஆக்சிஜன் அலர்ட் சேஃப்டி டிவைஸ் ஒன்றை ஸ்மார்ட் வாட்ச் வடிவில் கண்டுபிடித்துள்ளார். இந்த சாதனத்தில் சிம்கார்டு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. கையில் வாட்ச் கட்டுவதை போல, இந்த சாதனத்தை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி அணிந்து கொள்பவருக்கு, அவருடைய உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் தெரிய வரும்.
அதாவது, ஆக்சிஜன் அலர்ட் சேஃப்டி டிவைசில் பொருத்தப்பட்டுள்ள சிம் கார்டில், யாருடைய எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த எண்களுக்கு முதலில் மெசேஜ் போகும். அடுத்து அழைப்பு போகும். அதன்பிறகு அவர்களுடைய செல்போன் வைப்ரேட் ஆகும். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரிய வரும்.