ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 26, 27 தேதிகளில் தொடர்ச்சியாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 22 நோயாளிகள் உயிரிழந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உரிமையாளர், ‘ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், ஆக்சிஜன் இல்லாமல் தாக்கு பிடிக்கும் நோயாளிகள் யார் என்பதை கண்டறிவதற்காக 5 நிமிடங்கள் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தும் ஒத்திகை செய்யப்பட்டது. அதில்தான், 22 நோயாளிகள் இறந்தனர்,’ என வீடியோவில் கூறியிருந்தார்.