கனடாவில் மேலும் 2 இந்திய அமைச்சர்கள்

டொரன்டோ: கனடாவில் உள்ள அன்டோரியா மாகாண அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் இருவர் இடம் பெற்றுள்ளனர். இந்த மாகாணத்தின் அமைச்சரவையில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தில், பதவியேற்ற 3 பேரில் 2 பேர் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள். 30 வயதாகும் சர்க்காரியாவுக்கு கருவூல இலாகாவும், 47 வயதாகும் பார்ம் கில்லுக்கு குடியுரிமை மற்றும் கலாசார துறையும் வழங்கப்பட்டுள்ளது. இருவருமே பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். ஏற்கனவே இந்த அமைச்சரவையில் இந்தியாவை சேர்ந்தவர் அமைச்சராக இருக்கிறார்.

Related Stories: