ஈரான் அதிபர் தேர்தலில் தலைமை நீதிபதி வெற்றி

துபாய்: ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியின் பதவிக் காலம் சமீபத்தில் முடிந்ததை தொடர்ந்து, புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் கமாட்டி, இஸ்லாமிய புரட்சிப் படை தலைவர் மொக்சின், இஸ்லாமிய புரட்சி முன்னணி தலைவர் அமீர் ஹொசேன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், ஈரான் தலைவர் ஹயதுல்லா அலி கொமேனியின் ஆதரவாளரான ரைசி வெற்றி பெற்றார்.

Related Stories: