சென்னை ஏழைகளுக்கு சலுகை விலையில் சிமெண்ட்!: தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்..!! Jun 19, 2021 உற்பத்தியாளர் சங்கம் தமிழக சென்னை: ஏழை மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தென்னிந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டில், சிமெண்ட், கம்பி, ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி இரு தினங்களுக்கு முன்னர் கட்டுப்பான பொருட்களின் உற்பத்தியாளர்கள் உடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் விலையேற்றம் குறித்து தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கொரோனா 2வது அலையால் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறியுள்ளனர். 40 சதவீத தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கி வருவதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாத ஒன்று என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்
இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை