தமிழகம் ஒன்றேகுலம் ஒருவனேதேவன் என்பதே திமுக-வின் தாரக மந்திரம்!: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு..!! Jun 19, 2021 திமுக தேவன் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் விழுப்புரம்: ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை தாரக மந்திரமாக கொண்டு திமுக ஆட்சி செயல்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் 262 அர்ச்சகர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, ஒன்றேகுலம் ஒருவனேதேவன் என்பதே திமுக-வின் தாரக மந்திரம் என்றார். திமுக எப்போதும் யாரையும் வேறுபடுத்தி காட்டியது கிடையாது என்று கூறினார். அதேவழியில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். 32 ஆண்டு காலம் நடைபெறாமல் இருந்த திருவாரூர் தேர் திருவிழாவை விமர்சியாக நடத்தியது கலைஞர் ஆட்சி என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கோவில்களில் பட்டியலினத்தவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்ததும் கலைஞர் தான் என்று பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டார்.
பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே வாக்காளர் பட்டியலை பார்ப்பாங்க…அண்ணாமலையை கலாய்த்த அதிமுக மாஜி அமைச்சர்
போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை 2 பேருக்கு 7 ஆண்டு சிறை: மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது இன்று முதல் 30ம் தேதி வரை 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்: கன்னியாகுமரி, நெல்லையில் லேசான மழைக்கு வாய்ப்பு
அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்களிடம் 10 மணிநேரம் விசாரணை: அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி, பதில்கள் வாக்குமூலமாக பதிவு
மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற மதங்களுக்கு எதிராக எந்த சம்பவங்களும் நடக்கவில்லை: பாஜ மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பேட்டி
மதரீதியான பிளவை ஏற்படுத்த மோடி முயற்சி பிரிவினைவாத பேச்சு அடிப்படையில் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தண்டனை எந்த சூழலிலும் குழந்தைகளை நல்வழிப்படுத்தாது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய விதியை அமல்படுத்த வேண்டும்: தமிழக கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜனநாயகப்புலிகள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கடிதம்: செல்வப்பெருந்தகையுடன் நேரில் சந்திப்பு