சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு!: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யாவுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு..!! Jun 19, 2021 AIADMK MLA சத்ய Icourt சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக தியாகராயர் நகர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தியாகராயர் நகர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் மேற்குமாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016 - 17ம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி 1 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. குறிப்பாக 2018 - 19ம் நிதியாண்டில் மேற்குமாம்பலம் காசிக்குளம் பகுதியில் கட்டிடமே கட்டாமல் ரூ.30 லட்சம் செலவு செய்ததாகவும் கணக்கு காட்டப்பட்டது. அதேபோல் 2017 - 18ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் சட்டத்துக்கு புறம்பாக ரூ.2 கோடி நிதியை வெறும் சாலை அமைக்கும் பணிக்கு மட்டும் பயன்படுத்தியதாகவும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்ததாசன் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவில், தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எனவே இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி வரும் 27ம் தேதி வழக்கு குறித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்திருக்கிறார்.
இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்: 2 மகன்களுடன் வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக குற்றச்சாட்டு
சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு; பிற மாநிலங்களில் இருந்து தகவல் கிடைத்ததும் முடிவு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
6 சட்டமன்ற தொகுதியிலும் எம்பி அலுவலகம் சோழிங்கநல்லூரில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்: தென் சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி
வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்ட பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி
வலது தொண்டை குருதிக்குழாயில் இளம்பெண்ணுக்கு புற்றுக்கட்டி வெற்றிகரமாக அகற்றம்: அப்போலோ மருத்துவமனை சாதனை
ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மனோவுக்கு பிரசாரம்: மேட்டுப்பாளையம் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி
நினைத்தது நடக்கவில்லை என்பதால் பழித்து பேசுகிறார் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அண்ணாமலை பொறுப்பில் இருப்பாரா என பார்ப்போம்: எடப்பாடி சொல்கிறார்
தேர்தல் பத்திரம் மூலம் பல கோடிகளை சுருட்டிவிட்டு ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜவிற்கு தகுதி கிடையது: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தினால் காலை 11 மணிக்கு முன்னர் தடுப்பூசி செலுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளரை ஆதரித்து தாம்பரம் மார்க்கெட் பகுதிகளில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பிரசாரம்