மியான்மர்: மியான்மர் ராணுவ ஆட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அந்நாட்டிற்கு ஆயுதம் அனுப்ப தடை விதித்துள்ளது. நியூயார்க் நகரில் கூடிய ஐ.நா.சபை கூட்டத்தில் மியான்மரில் கடந்த பிப்ரவரியில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது குறித்து உறுப்பு நாட்டு பிரதிநிதிகள் கவலை தெரிவித்தன. ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மியான்மர் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்து அவர்கள் வேதனை தெரிவித்தனர்.ரோஹிங்கியா முஸ்லீம்கள் உயிருக்கு பயந்து அந்நாட்டில் இருந்து வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்தது தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான வங்கதேச பிரதிநிதி கேட்டுக் கொண்டார்.