குப்பைக்கு தீ வைப்பதால் பாலத்தில் புகை மூட்டம்

பள்ளிபாளையம் : கொக்கராயன்பேட்டை காவிரி பாலத்தின் அடியில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் உரிய முறையில் திடக்கழிவு மேலாண்மை செய்வதில்லை. பீடித்தொழிலாளர்கள் மீதமாகும் குப்பைகளையும் இங்கு கொண்ட்டி செல்கின்றனர். இந்நிலையில் இந்த குப்பையை சிலர் பற்ற வைத்து விட்டு செல்வதால், பாலம் முழுவதும் புகை மூட்டமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கள்ளாகி வருகின்றனர். எனவே, கொக்கராயன்பேட்டை ஊராட்சி குப்பை கிடங்கில் கொட்டி உரமாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: