சென்னை கேளம்பாக்கம் சுஷீல்ஹரி பள்ளி ஆசிரியை தீபா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!! Jun 19, 2021 சுஷில் ஹரி பள்ளி சென்னை உயர் நீதிமன்றம் தீபா சென்னை: கேளம்பாக்கம் சுஷீல்ஹரி பள்ளி ஆசிரியை தீபா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சுஷீல்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை அளித்ததாக மாணவிகள் குற்றம்சாட்டி புகார் அளித்திருந்தார்கள். அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். இதையடுத்து திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சுஷீல்ஹரி பள்ளி ஆங்கில ஆசிரியை தீபா வெங்கட்ராமன் என்பவர் மீது போக்சோ சட்டத்தில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சுஷீல்ஹரி பள்ளி ஆசிரியை தீபா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் சுஷீல்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியில் சேர்ந்து தற்போது வரை பணியாற்றி வருகிறேன். பாலியல் குற்றச்சாட்டு புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனக்கு எதிராக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. எனவே இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் இதற்காக நீதிமன்றங்கள் விதிக்கும் நிபந்தனைகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். வழக்கில் கைதாகாமல் இருக்க தீபா தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்
இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்: 2 மகன்களுடன் வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக குற்றச்சாட்டு
சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு; பிற மாநிலங்களில் இருந்து தகவல் கிடைத்ததும் முடிவு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
6 சட்டமன்ற தொகுதியிலும் எம்பி அலுவலகம் சோழிங்கநல்லூரில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்: தென் சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி
வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்ட பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி
வலது தொண்டை குருதிக்குழாயில் இளம்பெண்ணுக்கு புற்றுக்கட்டி வெற்றிகரமாக அகற்றம்: அப்போலோ மருத்துவமனை சாதனை
ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மனோவுக்கு பிரசாரம்: மேட்டுப்பாளையம் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி
நினைத்தது நடக்கவில்லை என்பதால் பழித்து பேசுகிறார் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அண்ணாமலை பொறுப்பில் இருப்பாரா என பார்ப்போம்: எடப்பாடி சொல்கிறார்
தேர்தல் பத்திரம் மூலம் பல கோடிகளை சுருட்டிவிட்டு ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜவிற்கு தகுதி கிடையது: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி