குற்றம் ஆந்திராவில் பயங்கரம்!: காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்த காதலன்... சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்..!! Jun 19, 2021 ஆந்திரப் பிரதேசம் கடப்பா: காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞரை சுற்றிவளைத்து தாக்கிய கிராமமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சித்தலசெருவு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஷாவை அதே பகுதியில் வசிக்கும் சரண் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சரணின் காதலை ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீஷாவின் கழுத்தை அறுத்து கொலை செய்த சரண், தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனை அறிந்த கிராமமக்கள் சரணை பிடித்து சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசாரிடம் சரணை ஒப்படைத்தனர். ஸ்ரீஷாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பத்வேல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சரண் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது
வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் 15 ஆண்டுக்கு பின் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் நடன பேராசிரியர் கைது: 5 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு
கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ நிர்வாகிக்கு பளார்.. பளார்.. அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு போலியாக தயாரித்து விற்பனை சென்னையில் பணியாற்றிய ஒன்றிய அரசு அதிகாரி கைது: உ.பி. போலீஸ் நடவடிக்கை
பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது!
எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை