முக்கிய செய்தி இந்தியா கொரோனாவின் 2வது அலை; கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்: வெறிச்சோடிய சாலைகள்...விதி மீறல்களுக்கு அபராதம் Jun 19, 2021 கொரோனா அமல் கேரளா கேரளா: கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே முழு ஊரடங்கை முன்னிட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வார இறுதி நாளான இன்று காலை அனைத்து வர்த்தகம் சார்ந்த கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற விசயங்களுக்கு வெளியே செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கேரளாவில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. மக்கள் கூட்டமும் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடந்த 17ந்தேதி காலை 7 மணி முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதன்படி, 8 சதவீதத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு விகிதம் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாடுகளுடன் வழக்கம்போல் செயல்படவும், கடைகளை திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். பகுதியளவில் பொது போக்குவரத்து செயல்படும். அனைத்து நாட்களிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கவும், மதுபானங்கள் விற்பனை செய்யும் பார்கள் திறக்கவும் அனுமதிக்கப்படும். கேரளாவில் ஊரடங்கு தளர்வுகளை முன்னிட்டு வேலைக்கு செல்லும் மக்கள் ஆட்டோ, பேருந்து ஆகிய வசதிகளை மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எனினும், கேரளா முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் தொடர்கிறது.
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: 8 ஒன்றிய அமைச்சர், 2 மாஜி முதல்வர், 1 மாஜி ஆளுநரின் எதிர்காலம் என்னாகும்?
மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம் மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: ஓட்டுபோட்ட பின் செல்வப்பெருந்தகை பேட்டி
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவு; அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 26.58%
மக்களவை தேர்தல்; தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவு.! அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 15.10% பதிவு
நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில் மரியாதையும், கௌரவமும் இருக்கிறது: தனது வாக்கை நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 மக்களவை தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்..!
தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 1.50 லட்சம் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு
நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு; மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.! பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு
மக்களவை தேர்தலில் வாக்களிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்ல இலவச வாகன வசதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்