முக்கிய செய்தி இந்தியா இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் மில்காசிங் கொரோனாவால் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல் Jun 19, 2021 மில்கசிங்க கொரோனா பஞ்சாப்: இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் மில்காசிங் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 91 வயதான மில்காசிங் இளம் தடகள வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக விளங்கியவர். முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தொற்றால் மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் காலமானார். மில்காசிங் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் ஆர்ழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி பொதுமக்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு !
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் பக்தர்களின் ஆரவாரத்துடன் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு பேச்சு; மோடிக்கு எதிராக குவியும் கண்டனங்கள்.! மக்களை திசைதிருப்ப தரம் தாழ்ந்து பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு உள்பட 20 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு
எல்லா நோய்களுக்கும் சிகிச்சை பெறமுடியும்; மருத்துவ காப்பீட்டில் வயது வரம்பு நீக்கம்: புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் விதிகள் அறிவிப்பு
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
சாதி, மதம் என்றிருந்த அரசியல் பாணியை வளர்ச்சியை நோக்கியதாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா புகழாரம்
இந்தியா அமல்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களின் உரிமையை பாதிக்கும் : அமெரிக்க நாடாளுமன்றம் கவலை
6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள்: சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு.. மற்ற வேட்பாளர்கள் வாபஸ்… சூரத் தொகுதியில் போட்டியின்றி தேர்வாகிறார் பாஜக வேட்பாளர்!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கியின் அசல் ஆவணங்களின் நகல் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைப்பு; ஏப்.25 வரை காவல் நீட்டிப்பு..!!