மும்பை: மும்பையில் தடுப்பூசி முகாம் நடத்தி மோசடி செய்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். காந்திவலி மேற்கு பொய்சரில் ஹிராநந்தனி ஹெரிடேஜ் ஹவுசிங் சொசைட்டி உள்ளது. இங்கு கடந்த மே மாதம் 30ம் தேதி தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்காக பிரபல மருத்துவமனையை சேர்ந்த ஒருவரிடம் பேசி ஏற்பாடு செய்தனர். இந்த முகாமில் 390 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கோவேக்சின் தடுப்பூசி போடுவதாகவும் ஒரு ஊசிக்கு 1,260 வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு சுமார் 5 லட்சத்தை தடுப்பூசி முகாம் நடத்தியவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை. இது குறித்து முகாம் நடத்தியவர்களிடம் கேட்டபோது, 3 நாட்களில் சான்றிதழ் வாங்கப்படும் என தெரிவித்தனர்.