ஊட்டி: பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் 97.91க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 23 காசு உயர்ந்து 98.14க்கு விற்கப்பட்டது. டீசல் 92.03க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று 28 காசு உயர்ந்து 92.31க்கு விற்பனையானது.
கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நீலகிரியில் நேற்றைய விலை உயர்வுக்கு பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.17 ஆக உள்ளது.