இந்தியா இந்தியாவில் கொரோனா 3ம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது!: சுகாதார நிபுணர்கள் தகவல்..!! Jun 18, 2021 கொரோனா இந்தியா டெல்லி: இந்தியாவில் கொரோனா 3ம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக கொரோனா 3ம் அலையின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்றே கருத்துக்கள் பரவின. இந்த நிலையில் கொரோனா 3ம் அலையின் தாக்கம் இந்தியாவில் எந்த அளவில் இருக்கும் என்பது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சுகாதாரத்துறை நிபுணர்களிடம் கருத்து கேட்டது.இதில் 85 சதவிகிதம் பேர் இந்தியாவில் கொரோனா 3ம் அலையின் தாக்கம் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்றும் 70 சதவிகிதம் பேர் 3ம் அலையின் தாக்கம் முதல் 2 அலைகளை விட குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டனர். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 5 சதவிகிதம் பேருக்கு முழுமையாக போடப்பட்டிருக்கும் நிலையில் அதன் தாக்கமும் 2வது அலையில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று மூன்றில் இரண்டு பங்கு சுகாதாரத்துறை நிபுணர்கள், மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி அளிக்காததே இதற்கு காரணமாக இருக்கும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: காங். கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திட்டவட்டம்!!
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மக்களவைத் தேர்தல்: உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: காங். பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் காதலியுடன் தாய்லாந்தில் பதுங்கியிருந்த பிரபல தாதா கைது
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி போராட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம்
கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!!
வயநாடு தொகுதி மக்களை துப்பாக்கிகளுடன் மிரட்டிய மாவேயிஸ்ட்டுகள்: தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்