முக்கிய செய்தி சென்னை சென்னை - பெங்களூரு 6 வழிச்சாலைக்கு ரூ.312 கோடி இழப்பீடு பெற்றதில் முறைகேடு!: அரசு நிலத்துக்கு போலி பட்டா...குஜராத் புள்ளி மீது வழக்கு..!! Jun 18, 2021 சென்னை பெங்களூர் குஜராத் சென்னை: சென்னை - பெங்களூரு 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதில் 312 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிய விவகாரத்தில் குஜராத் புள்ளி மீது வழக்கு பாய்ந்துள்ளது. அரசு நிலத்தை போலி பட்டாக்கள் மூலம் வளைத்த அவர், அதிகாரிகள் துணையோடு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி காட்டி கூடுதல் இழப்பீடு பெற்றது தெரியவந்துள்ளது. அதற்கு துணைபோன அதிகாரிகளும் கைதாகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எண் 4ஐ அகலப்படுத்தி 6 வழிச்சாலையாக மாற்றும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. அதற்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை இழப்பீடுகளை வழங்கி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பீமன்தாங்கல் கிராமத்துக்கு மட்டும் 247 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அங்கு அரசு நிலத்தை போலி பட்டா மூலம் வளைத்து இழப்பீடு பெற்றது பின்னர் தான் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த விவகாரம் சி.பி.ஐ.க்கு சென்றுள்ளது. பீமன்தாங்கலை தொடர்ந்து பெண்ணனூர் கிராமத்தினர் 48 கோடி ரூபாயும், ஸ்ரீபெரும்புதூர் 13 கோடி, ஏனத்தூர் 3 கோடி, வேடல் 1 கோடி மற்றும் தாமல் கிராமத்தினர் 25 லட்சம் ரூபாய் என மொத்தம் 312 கோடி ரூபாய் இழப்பீடாக பெற்றுள்ளனர். அதுதவிர மேலும் 31 வழியோர கிராமங்களும் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் வருகின்றன. அரசின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி காட்டி அதிக இழப்பீடு பெற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதற்கு துணைபோன அதிகாரிகளை தண்டிக்கும்படி அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 6 வழிச்சாலைக்காக பீமன்தாங்கல் கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடி விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதற்காக அந்த பகுதியில் கூடுதலாக எடுக்கப்பட்ட 7.5 ஏக்கர் நிலத்துக்கு சென்னையை சேர்ந்த அஜீஸ் மேத்தா 33 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுள்ளார். ஆனால் அந்த நிலம் தம்முடையது தான் என்றும் தனக்கே இழப்பீடு தொகை சேர வேண்டும் என நவகோட்டை நாராயணன் என்பவர் போர்க்கொடி தூக்கினார். அதன் பேரில் காஞ்சி மாவட்ட நிர்வாகம் ஆவணங்களை சோதித்த போது தான் அது அரசின் அநாமத்தைய நிலம் என்பது தெரியவந்தது. 1962ம் ஆண்டுக்கான அரசின் செட்டில்மண்ட் ஆவணம், 1987ம் ஆண்டின் அரசின் ஆ பதிவு ஆகியவற்றில் மேய்ச்சல் நிலம் என காட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அஜீஸ் மேத்தாவின் 7.5 ஏக்கர் மற்றும் அருகில் உள்ளவை என 45 ஏக்கர் நிலத்துக்கான போலி பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து அவற்றை மீண்டும் அரசு நிலமாக வகைப்படுத்தியுள்ளார். அஜீஸ் மேத்தா மற்றும் அவருக்கு துணைபோன அதிகாரிகள் மீது வழக்கு பாய்ந்துள்ளது. சென்னை - பெங்களூரு 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி பல கட்டங்களாக நடைபெறுகின்றன. அதன்படி பூவிருந்தமல்லியில் தொடங்கி வாலாஜா வரை 93 கிலோ மீட்டருக்கான பணி மட்டும் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறுகின்றன. இந்த வழித்தடத்தில் 10 உயர்த்தப்பட்ட பாலங்கள் கட்டப்படுகின்றன. இதேபோல் வாலாஜா - கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி - ஓசூர், ஓசூர் பெங்களூரு என சாலை விரிவாக்கத்திற்கு இழப்பீடு வழங்கியதில் முறைகேடுகள் அரங்கேறி இருக்க வாய்ப்பு உள்ளது. அதன் மையமாக உள்ள அஜீஸ் மேத்தா, குஜராத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரை விசாரிப்பதன் மூலம் இத்திட்டத்தின் மொத்த மோசடிகளும் அம்பலமாக வாய்ப்புள்ளது.
பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது!
நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி பொதுமக்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு !
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் பக்தர்களின் ஆரவாரத்துடன் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு பேச்சு; மோடிக்கு எதிராக குவியும் கண்டனங்கள்.! மக்களை திசைதிருப்ப தரம் தாழ்ந்து பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு