கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த தேபாஷிஷ் ஆச்சார்யா, உள்ளூர் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இவர் கொல்கத்தாவில் நேற்றிரவு மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த போலீசார், தேபாஷிஷ் ஆச்சாரியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. இச்சம்பவத்தால் கொல்கத்தா நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கொலையான தேபாஷிஷ் ஆச்சார்யா, கடந்த 2015ம் ஆண்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜியை கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.