கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் முதலமைச்சரும், திரினாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, புர்பா மெட்னிபுர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். இவர், ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு மம்தாவை எதிர்த்து போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த மே மாதம் 2ம் தேதி, முதலில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.