காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து சட்டக் கல்லூரி மாணவியை சரமாரியாக குத்தி கொலை செய்த வாலிபர்; கேரளாவில் பயங்கரம்

திருவனந்தபுரம்: காதலிக்க மறுத்த சட்ட கல்லூரி மாணவியை வாலிபர் வீடு புகுந்து 22 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். பொம்மைக்கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி தீபா. இந்த தம்பதிக்கு திருஷ்யா (21), தேவ (13) என 2 மகள்கள். இதில் திருஷ்யா எல்எல்பி படித்து வந்தார். தேவ 7ம் வகுப்பு படித்து வருகிறார்.திருஷ்யாவுடன் 12ம் வகுப்பு படித்த முட்டுங்கல்லை சேர்ந்த வினீஷ் வினோத் (21) என்பவர் அவரை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். இந்த காதலை திருஷ்யா ஏற்றுக் கொள்ளவில்லை.

இருப்பினும் வினோத் தொடர்ந்து ெதால்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து திருஷ்யா தனது தந்தையிடம் கூறினார். அவர் பெரிந்தல்மண்ணா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வினீஷை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாலசந்திரனின் கடையில் தீ பிடித்து உள்ளது. இதை பார்க்க அவர் சென்றார். திருஷ்யா, தேவ இருவரும் மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அறைக்குள் புகுந்த வினீஷ், திருஷ்யாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். தடுக்க வந்த தேவக்கும் கத்தி குத்து விழுந்தது. சத்தம் கேட்டு வீட்டின் கீழ் தளத்தில் இருந்த தீபா ஓடி வந்தார். அதற்குள் வினீஷ் தப்பி சென்றுவிட்டார்.

அதைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியில் திருஷ்யா பரிதாபமாக இறந்தார். தேவ சிகிச்சை பெற்று வருகிறார். வினீஷ் வெளியே வந்து, ஜவஹர் என்பவர் ஆட்ேடாவில் ஏறி தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். அவர் கொலை செய்து விட்டு தப்பி செல்வதை ஆட்டோ டிரைவர் ஜவஹரிடம், ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சொல்லியிருக்கிறார். இதையடுத்து ஜவஹர், காவல் நிலையத்துக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்று அங்கு வினீஷை ஒப்படைத்திருக்கிறார்.  போலீசார் வினீஷை கைது செய்தனர்.

திருஷ்யாவின் உடல் பெரிந்தல்மண்ணா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது கழுத்து, மார்பு உள்பட 22 இடத்தில் கத்திக் குத்து காயங்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து கேரள மகளிர் ஆணையமும் வழக்கு பதிவு செய்து உள்ளது. பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

Related Stories: