தமிழகம் பட்டாக்கத்தி, வீச்சரிவாளுடன் சினிமா பாடல் பின்னணியில் வீடியோ!: சமூக வலைத்தளங்களில் பரப்பிய வாலிபர்களால் பதற்றம்..!! Jun 18, 2021 சிவகங்கை: மானாமதுரை பகுதியில் பட்டாக்கத்தி, வீச்சரிவாளுடன் சினிமா பாடல் பின்னணியில் வாலிபர்கள் வளம் வரும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மழவராயனேந்தல் கிராமத்தில் சரவணபுலி என்பவர் தனது நண்பர்கள் சரண், பாண்டியராஜன், முத்துக்குமார், அபிஷேக் ஆகியோருடன் வாழைத்தோப்பில் பட்டாக்கத்தி, வால், வீச்சரிவாளுடன் சினிமா பாடல் பின்னணியில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற அந்த பாடலுடன் ஸ்டைலாக நடந்து வருவது போன்று படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் அதை பரப்பியுள்ளார். இதனை மழவராயனேந்தல் பகுதி இளைஞர்களுக்கும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அனுப்பியுள்ளார். அத்துடன் மட்டுமில்லாது மழவராயனேந்தல் பகுதி தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனங்களில் நேற்று மாலை அதிவேகமாக சென்றுள்ளனர். இதனை அப்பகுதி இளைஞர்கள் தட்டி கேட்டதால் இருதரப்புக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. தகவல் அறிந்த போலீசார் சரவணபுலியை கைது செய்து மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதனிடையே கிராமப்புறங்களில் சமூக பதற்றம் ஏற்படாமல் தடுக்க சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் தனிப்பட்ட வெறுப்புகளுடன் நீதிமன்றத்தை அணுக கூடாது
மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி
வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப அலை வீசும் என்பதால் தயார் நிலையில் மருத்துவர்கள்: பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
வாக்குப்பதிவின்போது சீரான மின்விநியோகம் தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுரை: அதிகாரிகள் தகவல்
உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு கூறியதால் இபிஎஸ் மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல்
பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் கட்டாயம் சரிபார்க்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு
அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க முன் அனுமதி தேவையில்லை: கலெக்டரின் உத்தரவு ரத்து, ஐகோர்ட் கிளை அதிரடி
சொந்த ஊர் செல்லும் வாக்காளர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்கம்!
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு