முக்கிய செய்தி சென்னை சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் வழக்கு!: புலன் விசாரணையை முடித்து 6 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை..!! Jun 18, 2021 Icord சென்னை: சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் புகார் வழக்கில் புலன் விசாரணையை முடித்து 6 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அச்சமயம் காவல்துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின் இரண்டு அதிகாரிகளிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் 5 அதிகாரிகள், 2 பிற சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை மொத்தம் 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஊரடங்கு காரணமாக தடயவியல் அறிக்கை பெற முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். தடயவியல் அறிக்கை 3 வாரங்களில் கிடைத்துவிடும் என்பதால் புலன் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 வார கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டி தன்னுடைய அறிக்கையை ஏற்கனவே உள்துறை செயலாளரிடம் சமர்பித்துவிட்டதாகவும் அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறப்பு டி.ஜி.பி. மீதான புலன் விசாரணையை முடித்து 6 வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரசை குறை கூறாதீர்கள்; 4 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஊடகங்களை சந்தித்தது ஏன்?- மோடியின் கருத்துக்கு கார்கே காரசாரமான பதில்
ஒன்றிய பாஜ அரசை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டில் இருந்து தான் தீப்பொறி புறப்பட இருக்கிறது: நூல் வெளியீட்டு விழாவில் செல்வப்பெருந்தகை பரபரப்பு பேச்சு
நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான் உதாரணமாக இருப்பேன் : தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரச்சாரம்
கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா?.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்
இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு; வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலனை: முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: மொத்தம்- 1,749; நிராகரிப்பு -664; ஏற்பு-1085.! நாளை இறுதி பட்டியல் வெளியீடு
கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து: ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம்
சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000 அதிகரிக்கும்… சுங்க கட்டணம் உயர்வால் லாரிகளுக்கு கூடுதல் செலவு: திரும்பப்பெற உரிமையாளர்கள் வலியுறுத்தல்
நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம்… பாஜக தலைவர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!!
DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி : உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?