உலகம் கள்ளப் பணத்தின் சொர்க பூமியாக மாறும் சுவிஸ் வங்கிகள்!: இந்தியர்கள் 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் ரூ.20,706 கோடி டெபாசிட்..!! Jun 18, 2021 இந்தியர்கள் பெர்ன்: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 20 ஆயிரத்து 706 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஸர்லாந்தில் உள்ள வங்கிகள் கள்ளப்பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக உள்ளது. இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளது குறித்து கடந்த ஆண்டிற்கான நிதி சார்ந்த வருடாந்திர தரவுகளை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் சுவிஸ் வங்கிகளில் 20 ஆயிரத்து 706 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச தொகையாகும். 2019ம் ஆண்டு இறுதியில் இந்த தொகை 6 ஆயிரத்து 625 கோடியாக இருந்தது. தற்போது சுவிஸ் வங்கிகளில் உள்ள 20 ஆயிரத்து 706 கோடி ரூபாயில் 4 ஆயிரம் கோடி ரூபாய் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன் அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமலான் கொண்டாட்டம்
கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 நபர்கள் கைது..!!
பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை: பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல : பூவுலகின் நண்பர்கள் பதிவு
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை.. அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி!!
இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக் கவுண்டவுன் தொடங்கியது.. ஜூலை 26ல் தொடங்கும் விழா கொண்டாட்டம்..!!
கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி..!!