சிறுமியை திருமணம் செய்த புது மாப்பிள்ளை கைது

திருவொற்றியூர்: வியாசர்பாடியை சேர்ந்தராஜீவ்காந்தி (29), திருவொற்றியூர் ராமசாமி நகரில் உள்ள தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை காதலித்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததுடன், இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் திருவொற்றியூர் மணலி விரைவு சாலை அங்காள பரமேஸ்வரி கோயிலில், இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள், எண்ணூர் அனைத்து மகளிர் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள், திருமணம் நடந்து விட்டது. இதையடுத்து, புது மாப்பிள்ளை ராஜீவ்காந்தியை, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: