அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை, கோவை மாவட்டம் திருத்தி அமைப்பு: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அஸ்பயர் கே.சுவாமிநாதன், தான் வகித்து வரும் பொறுப்பில் இருந்தும்; அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தன்னை விடுவிக்குமாறு வைத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று(நேற்று) முதல் விடுவிக்கப்படுகிறார். அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுதிருத்தி அமைக்கப்பட்டு செயல்படும். சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்கள்: வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு), தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு.கோவை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்கள்: கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு  என்று திருத்தி அமைக்கப்பட்டு செயல்படும். சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளராகஎம்.கோவை சத்யன் நியமிக்கப்படுகிறார்.

Related Stories: