முக்கிய செய்தி தமிழகம் 100% கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை!: பெற்றோர் தயங்காமல் புகார் அளியுங்கள்...அமைச்சர் அன்பில் மகேஷ்...!! Jun 17, 2021 மதுரை: 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான இடங்கள் குறித்து அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரையில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட உள்ளதாக கூறினார். நூலகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளதாகவும், அவரே இறுதி முடிவு எடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கு காலத்திலும் சில தனியார் பள்ளிகள் முழு கட்டணம் வசூலிப்பது பற்றிய கேள்விக்கு, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்தார். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பெற்றோர்கள் தயக்கம் இன்றி புகார் அளிக்கலாம் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் பள்ளிகள் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படும் என்ற சூழலில் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். தாம் ஆய்வு செய்த பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள், 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுவிட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்தார்.
பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது!
நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி பொதுமக்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு !
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் பக்தர்களின் ஆரவாரத்துடன் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு பேச்சு; மோடிக்கு எதிராக குவியும் கண்டனங்கள்.! மக்களை திசைதிருப்ப தரம் தாழ்ந்து பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு உள்பட 20 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு