சென்னை: பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கைதான சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி கைது செய்தது.